Monday, April 22, 2019

செல்லமே உந்தன்......

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
ராகம் : தேஷ்

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
கவலையில் கருத்தது அந்தி வானம்
கார் முடிக்கற்றையின் காரொளி தனைக் கண்டு
முகம் வெளுத் தொளிந்ததோ முன்னிருட்டு.       (செல்லமே)

காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை
பிரிந்தவர் நாம் கூட பேசுவது எங்கே
பின்னும் முன்னும் அறிவது எங்கே.                       (செல்லமே)

இருள் சூழ் நேரத்தில் என் முன்னில் நீ வர
இன்முகம் கதிரொளி தனை வீசும்
பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.                       (செல்லமே)

கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது
காலமாம் கன்னிப் பருவமும் நீயே
கடல் வான் புவி அழல் காற்றும் நீயே.                        (செல்லமே)

K.Balaji
March 27 2019
11.45 pm

ഓമനേ നിൻ കവിൾ കുങ്കുമം കണ്ടപ്പോൾ Oman's non kaviL kunkumam kaNdappOL என்ற மலையாளப் பாடலின் மொழிபெயர்ப்பு

இதற்கு நண்பன் ராம் சரசுராமின் விமர்சனம் :

"மன்னிக்கணும்ப்பா. இன்று முழுவதும் பிஸி. பிஸியாக இருப்பது என்பது வரமா சாபமா தெரியவில்லை. அம்மாவுக்கு கைகளில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஸ்கின் ப்ராப்ளம். எத்தனை சொன்னாலும் கேட்காமல் அந்த கைகளிலேயே பல வேலைகள் பார்ப்பார்கள். அது அவரது குணம். மாற்றுவது கடினம். ஆகவே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியாகும். பிறகு தொடரும். இதுவொரு தொடர்கதை. இன்னைக்கு அது சம்மந்தமாக ஒரு டாக்டரிடம் போக வேண்டி இருந்தது. மதியம் 1 மணிக்கு மேல் அப்பாயிண்ட்மெண்ட். கொழுத்துகிற வெய்யில். வெய்யிலின் எதிரொலியில் வண்டியில் வியர்வை சிந்த ஒரு பயணம். கிட்டத்தட்ட 30 கிமீ. திரும்பி வரும் போதும் அந்த வெய்யில் வெளியே காத்திருந்து மீண்டும் என்னைத் துரத்த தொடங்கியது. வீட்டிற்கு வந்துதான் உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை படிக்கத் தொடங்கினேன். "செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு.." நிஜமாய் இந்த ஆரம்ப வரியிலேயே அசந்து போனேன். என்னவொரு க்யூட்! ஒரு குழந்தையின் குண்டு கன்னம் மாதிரி.! தொட்டுத் தொட்டு படிக்கத் தோன்றியது. அதற்கு அடுத்த வரியிலேயே கற்பனை இன்னும் அழகாய் சிறகடித்தது. "கவலையில் கருத்தது அந்தி வானம்..".
காதல் உலகத்தின் அற்புதம். அதுதான் இந்த காலத்தையே நகர்த்துகிறது. அந்த உணர்வே இந்த வாழ்வின் உன்னதம். அதை கொண்டாடத் தெரிந்தவனே வாழ்கிறான். "காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை.." "கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது."   இந்த வரிகளில் அந்த காதலின் நிலை இன்னும் கவித்துவமாகிறது. அதிலும் "பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.." - வாவ்! என்னவொரு அழகு! ஏம்ப்பா அந்த ஒரிஜினல் கவிதையில் இவ்வளவு அழகான வார்த்தையும் கவித்துவமும் இருந்ததா? இல்லை அது இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைகள் செய்த வேலையா? மொழிபெயர்ப்பு கடினமான பணி! அந்த மொழிக்கு இணையான வார்த்தைகளை தேடி, அந்தக் கவிதையில் அந்த கவிஞன் என்ன உணர்ந்தானோ அந்த உணர்வை நம் மொழியில் தருவதென்பது கடினமான இலக்குத்தான். அதை உங்கள் உழைப்பும் கற்பனையும் அற்புதமாய் செய்திருக்கிறது. "செல்லமே உன் சிவந்த கன்னம் கண்டு" வை உங்கள் குரலிலும் கேட்கக் கிடைத்ததுதான்ப்பா நான் பெற்ற பேரின்பம்! அந்த கவிதை வரிகளுக்கு இன்னும் ஒளியூட்டியது என்னை பொறுத்தவரை உங்கள் குரல்தான். அதுதான் என் எதிர்பார்ப்பு! அதற்கு என் நன்றிகள்ப்பா.  நீங்கள் எனக்குக் கிடைத்ததை ஒவ்வொரு நொடியும் பெருமைப்படும் என் மனம் இன்றும் இன்னும் ஒரு படி மேலே போய் காலரை தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் கொண்டது. இந்தத் தமிழ் போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை! இன்று பகல் முழுவதும் என்னையே சுற்றிக் கொண்டிருந்த வெய்யில் இந்த கவிதையைப் படித்த பின் சட்டென விலகிப் போனது. வராந்தாவில் அமர்ந்து வானம் பார்த்து கொண்டேதான் இதை எழுதுகிறேன். அடித்த காற்றில் அவ்வளவு குளிர். அது இந்த கவிதையில் பிறந்த குளிர்!! நன்றிப்பா. நிறைய நிறைய எழுதுங்கள். அது எங்கள் மனதிலும் வந்து நிறையட்டும். வாழ்த்துக்கள்!!
👏👌👍💐😊🙏"

Friday, October 19, 2018

உலர்ந்த சருகின் உற்சாகம் !


உலர்ந்த சருகாகி யோர் 
மூலையில் விழுந்துவிட்டேன்!


பயனற்ற பொருளாகி யோர் 

பாரமாய் நின்றுவிட்டேன் !

பட்டயம் கட்டப்பட்ட 
பல்லக்குக் குதிரை யொன்று 
பார்க்கவோ ராளின்றிப் 
பாதையின் ஓரத்தில் 
பரிதவித்து நிற்கிறது !




காலத்தின் மாற்றத்தால் 

கண்ணியங்கள் மறக்கப்படும்! 
கற்பூரம்போலக் 
காற்றில் கரைக்கப்படும்!

என்றாலும் மனத்தின் 
ஏதோவோர் மூலையிலே 
நம்பிக்கையின் கீற்றொன்று 
மெல்லப் புறப்பட்டு 
மேனியைச் சிலிர்க்க வைக்கும்!
மேன்மைகள் நிலைக்கவைக்கும்!
கடந்த காலத்தின் சிறப்பெல்லாம்
கல்லோவிய மாகிக் 
களிக்கவைக்கும்!
கண்களைக் குளிரவைக்கும்!


--Translation and picture : K.Balaji

Above is a translation done by me, 
of the following poem by my friend

A leaf of life

I shrivelled up and aged 
Useless and burdensome 
A horse put to paddock 
Blown away to a corner 
Soon to be forgotten 
A lost hope 


Copyright Lily Swarn 13.10.2016

Thursday, September 27, 2018

பனித்துளி நாட்டியம்


பனித்துளி நாட்டியம்
***********************


பச்சை இலைகளின் 
மேலே ஆடும் 
பனித்துளிகளின் 

பரதநாட்டியம்!
இலைகளின் நரம்பின்
ஊடே ஓடும் 
இம்மி அளவே 
துளிகள் ஆடும்!
மதில் மேல் பூனை 
என்னும் பழஞ்சொல்
மனதினில் வந்து 
நிற்கும் போகும் 
வெள்ளித் துளியாய் 
மனதில் நிறைந்து 
வைரத் தொளியாய்
நெஞ்சை நிமிர்த்தும்!

நிலவின் அமுதத்
துளிகளை விழுங்கி
நெஞ்சம் போதை 
தனில் தள்ளாடும்!!
பருவ மாற்றம் 
தருமோர் பசுமை 
உள்ளம் நிறைக்கும் 
உவகை ஊற்றாய்!

கோடி கோடியாய் 
இன்பம் மனதைக் 
கொள்ளை கொண்டு 
போயிடும் எனினும்
அத்தனையும் ஓர் 
அரைக்கண வாழ்வே! 
ஆடும் பனித்துளி 
போலே மறையும்!

அடுத்த கணத்தில்
இல்லா தாகும்!

கண்களின் வழியே 
கண்ணீர்த் துளியும்
பனித்துளி போல் தான் 
படபடத் திறங்கிக்
கன்னக் கதுப்பினில் 
சரிந்தே ஓடும் 
காவியக் கனவுகள் 
கலைந்தே போகும் !

கண்ணிமை கனக்கும் !
காலம் சிரிக்கும் !
கணமோ யுகமாய்
பரந்து விரியும் !

-- கி. பாலாஜி
27.09.2018

Lily Swarm அவர்கள் எழுதிய dew drops என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.
This is a translation in Tamil,  of the English poem titled
 'Dew Drops' by Lily Swarn.

I have rendered the poem and it can be heard by clicking the following Link: 


The Original lines by Lily Swarn in English are given below :

Dew drops 

Ballerinas dancing on green leaves 
Like cats on hot tin roofs 
Glimmering and luminescent 
With hearts of diamonds 
Little moon drops drunk on life 
Staggeringly high on monsoon madness 
Coruscating inside their wet insides 
Bubbles of enchantment 
With tiny life spans 
Dew drops like tear drops 
Wiped off the cheek 

Copyright Lily Swarn 27.9.2018
Pic. (C) Lily Swarn

Tuesday, September 11, 2018

ஸோஹினி - மஹிவால் காவியக் காதல்

This is a Tamil translation of the English poem titled 'Sohini Mahiwal' by Lily Swarn. Story of Sohini and Mahiwal is one of the popular tragic love stories of Punjab . Here goes the Tamil version with a prelude !


காதலுக்கு சாவில்லை 
என்பதிலே கண்பனித்தோம் 
ஒப்புதலை கனமான 
மனத்துடனே நாமளித்தோம் !
எனில்
காதலுக்கு வாழ்வும் இல்லை 
என்பதனை நாமிங்கே 
காண்கின்றோம் !
பிறவிகள் 
எத்தனைதான் எடுத்தாலும் 
பிறந்துவந்த காதல் மட்டும்
வாழ்ந்து சுகிப்பதில்லை 
வளம் பெறவே 
வாழ்வதில்லை !

இது போன்ற காதலொன்றே 
ஸோஹினியும் மஹிவாலும் 
கொண்டிருந்த காதலதும் !
அவர் கொண்ட காதலதில் 
பொய்மை இருக்கவில்லை !
புளித்ததொரு உள்நோக்கம் 
எதுவுமே இருக்கவில்லை !

எனில்
உண்மைக் காதலுக்கு 
உதவிடுவார் எவருண்டு?
ஊராரின் பேச்சுக்கு 
எல்லைதான் எங்குண்டு?

இதோ
கேளுங்கள் இவர் கதையை !
-------------------------------------------------

ஸோஹினி - மஹிவால் காவியக் காதல் 
----------------------------------------------------------------

வெண்ணிலவின் வெள்ளிக்
கிரணங்கள் பிரதிபலிக்கும் 
'சேனாப்' நதியலைகள், 
'கித்தா' நடனம்போல் 
துள்ளித் தாமங்கே 
பேரலையாய்த் தானெழும்பும் 
பேரழகைக் காணத்தான் 
கண்ணிரண்டும் போதாதே !

கணுக்காலில் இணையிட்ட 
சலங்கைகளின் சப்தமதும்
சலசலக்கும் நதியோசை 
தன்னோடு நடம்புரியும்! 
மயக்கும் மணம்வீசும் 
இருளலையின் இயல்போடு
இணைந்தே மனம்தானும்
தவழ்ந்தே தாளமிடும் !

களிமண் பானையொன்று 
கைக்கீழில் இசைந்திருக்க,
இனிய நினைவுகளின் 
அசைவோடு இடுப்பசைய
சரிகைக் கரையிட்ட 
முக்காட்டில் முகம்நிறைந்த
நாணம் கசிந்தோட 
நல்விழிகள் படபடக்க 
சுற்றுமுற்றும் பார்த்தபடி 
ஸோஹினி நடக்கின்றாள் 
சுந்தரன் முகமதனை
நினைவினில் சுமக்கின்றாள் !

காதல் அலையதனின்
வெண்மை நுரைபொங்கக் 
காதலன் காத்திருப்பான் 
மறுகரையில் என்பதனைக் 
கையை அணைத்திருக்கும்
தந்த வளைகளதன்
அசைவின் ரீங்காரம் 
அவளுக்கு எடுத்துரைக்க

அந்த
ஒற்றைப் பார்வையதன்
ஓராயிரம் பொருளுக்காய் 
ஏங்கும் மனத்துடனே
ஏந்திழை நடந்திட்டாள் !
என்றும் போலவேதான் 
நீரில் அமிழ்ந்திட்டாள்
மிதவை போலத்தன்
பானையைக் கவிழ்த்திட்டாள் !

ஒன்றா யிணைந்தந்த
மிதவை தன்னுடனே 
மிதந்தே தான்செல்வாள் 
தலைவன் தனைக்காண்பாள்
அதுவே தினந்தோறும் 
அவளது செயலாகும் 
அந்தோ அன்றையநாள்
விதியின் நாளாமே !

வஞ்சகம் புரிந்தோரின் 
நெஞ்சஞ்சும் செயலாலே
கவிழ்த்த மிதவையதும்
கணத்தில் உடைந்ததுவே!
பாவை மிதந்தாளே
பாவிகள் மகிழ்ந்தாரே 
பார்த்த காதலனும்
நீரில் குதித்தானே !

அவளே பானையிலே
வரைந்த ஓவியமும் 
அவர்களின் காதல்போல் 
கரைந்தே போயினவே !
பட்டுத் தறிபோன்ற 
மென்மை உணர்வாலே
நெய்த காதலுமே
நீரில் அமிழ்ந்ததுவே !

இருமனம் இணைந்தால்பின் 
திருமணம் என்பாரே
ஈங்கிதை என்சொல்வோம் 
தீங்கிழைத் தனரன்றோ 
கண்ட கனவெல்லாம் 
கரைந்தே போயினவே 
காதல ரிருவருமே 
இணைந்தே மாண்டனரே !

காதல் மட்டுமென்றும் 
பிரிவதற்கு மாத்திரமோ 
பிறவிகள் கடந்தாலும் 
பிரிவுமட்டும் மாறாதோ !
'என்னருமை மஹிவாலே
எனைக்காக்க வென்றெண்ணி 
ஏனோ நதிகலந்தாய்
ஏனோ தனைமறந்தாய்?

மாசறியா உடலிரண்டும் 
மரித்தாலும் பிரிந்தாலும் 
மனங்கள் என்றென்றும் 
பிரிவது தானில்லை !
'சேனாப்' நதியம்மா 
நீயே கதியம்மா !
உன்னோடு கலந்திட்ட 
காதலனை நான்சேர்வேன்

உன்னிலே மிதக்கின்ற 
என்னுடலே நீயெனக்கு
உடுத்திவிட்ட மணப்புடவை
உண்மையான தோர்மிதவை !
உன்னுலகே நாமிருவர் 
வாழத் தகுந்தவோர் 
உன்னத உலகாகும் 
உண்மை இதுவாகும்"

என்றே சொன்னவளை 
எதிர்கொண்டாள் நதியன்னை 
ஏற்றமிகு தன்கரத்தில் 
ஏந்திப் புறப்பட்டாள் !
வாழ்க்கை இணைப்பதற்குத் 
தயங்கியதோர் உறவுகளை 
மரணம் இணைத்ததுவே 
மனங்கள் இணைந்தனவே !

--கி.பாலாஜி 
-- 09 ஆகஸ்ட் 2018

*கித்தா Giddha Dance is a 
Folk Dance of Panjab . 
Story of Sohini and Mahival 
is one of the popular 
Tragic Love Stories of Punjab.


The Original lines in English by Lily Swarn is given below:

SOHNI MAHIWAL
Silvery moonbeams draped 
in gossamer 
dancing the Giddha dance 
in jubilation 
Voluminous majestic waves 
rising ominously
In the glimmering waters of 
the Chenab river

The sound of silver anklets 
tip toeing
Musically into the fragrant 
darkness
The earthen pitcher tucked 
beneath one arm 
The supple waist swaying 
to the song in her heart

Sohni smiled shyly below 
her golden gota bedecked 
veil 
The whispering bangles 
tinkling softly on her ivory 
wrists 
Her Mahiwal waited across 
the foaming waters of love 
Sighing and yearning for 
that one glance of his beloved 
life

The Clay pitcher slipped 
deftly into the inviting 
expanse of liquid
Inverted in order to float 
across the frothing folds of 
pining 
The silken skeins of 
sensuous satin love 
smoothed her fears 
The pot was fragile 
deceptive though painted 
by Sohni herself

It sank without a whimper 
like her frozen dreams 
Love suffered in each birth 
again and again 
Destiny emerged victorious 
baring her fangs 
O my Mahiwal why did you 
dive to save me?

O River, make your bosom 
my bridal enthrall
Where I conceal the 
fragrance of my Mahiwal!

(Death United them 
as Life never could)

Gota -a golden ribbon 
used to border clothes.
Giddha-Folk dance of 
Punjab performed by 
women on festive 
occasions like weddings.

© 2017. Lily Swarn. 
All rights reserved.

Friday, August 31, 2018

யாக்கையின் பெருமை !



யாக்கை !

நிலையாத யாக்கை யெனினும் - அது
நிலைக்கிறது எண்ணங்களில்,
நிகரற்ற நினைவாற்றல் திறனோடு!
பொய்மை அதிலில்லை, புரட்டில்லை, 
போகாத வழிகாட்டிச் செலுத்துவ தில்லை!
எனில் மனம் அங்கே 
வழிநடத்தும் மாயம் உண்டு!

யாக்கை 
அன்பும் காட்டும்;
அழிக்கவும் செய்யும்;
எனில் அதன்
விகிதாச்சாரம் ஒன்றே!

அறிவை ஆள்கிறது யாக்கை!
அதில் ஏழு சக்கரமும் 
செய்கிறது வாசம் !
பசி, தாகம் அதற்குண்டு !
ஊக்குவிக்கும் உத்வேகம்
அதிலுண்டு;
உன்மத்தம் பிடிக்க வைக்கும் 
காமதாகம் அதற்குண்டு!
எனில்
அன்னையெனும் உணர்வின்
அருகாமை அறிந்து கொள்ளும்!
வெறுப்படையச் செய்யும்;
வெறுக்கவும் செய்யும்;
வெட்டினாலும் சலியாது;
வெறுத்தாலும் தளராது;

அரசனையும் ஆண்டியாக்கும்
வலுவுண்டு !
அரசுக் குரியதோர்
அகந்தையும் அதற்குண்டு; 
நிறமும் குலமும்
அதற்கொரு பொருட்டல்ல;
அண்டமோ காலமோ 
அதற்கொரு அளவல்ல;
அது அணியாத ஆடை 
கிடையாது; 
அண்டபகி ரண்டமும் 
அதனுடைய ஆடைதான்! 
அங்கிங் கெனாதபடி
எங்கும் அதன் சலனம் !
சொந்தங்கள் அதற்கில்லை,
பந்தங்கள் பொருட்டில்லை!

யாக்கை தனைக்காக்க
யார்க்கும் வழியில்லை;
நெருப்பில் நீறாகிப் போகும்; 
நீரில் சடலமென மிதக்கும்;
மறைந்த அழகுக்கு அது என்ன
மாற்றமா கேட்கிறது?

மதனாக வாழ்ந்தாலும் 
மண்ணாகித் தானங்கே 
மடிந்து போகிறது !
கல்லறை மேல்வைத்த 
மலர்க்கொத்தும் 
கனத்த மனம் சிந்தும் 
கண்ணீரும் அறியாமல் 
மரணித்து மண்ணுக்குள் 
மக்கிப் புதைகிறது ! 

மனமோ மரத்துப்
போகிறது !

--கி.பாலாஜி 
K.Balaji
30.08.2018

An almost translation of the poem 'FLESH' , 
Written by Lily Swarn : (Or is it just ideas borrowed?)

Original in English : 

FLESH 

Flesh has a brilliant memory 
Elephantine and accurate 
It never lies 
It doesn't mislead 
Flesh knows 
Instinctively Arjunesque! 
It can kill or love with the same equanimity 
Flesh is what rules the brain 
The seven chakras bow to it 
Flesh devours 
Flesh inspires 
Flesh crawls and creeps into amorous bowers 
Flesh disgusts 
Flesh abhors 
Flesh knows it's mother by her scent 
It makes kings of paupers 
It shuns not by race or colour 
Flesh advances in full regalia 
Untouched by time and space 
It ferrets out its own 
Through eons and milky ways 
It rides on meteors and parades in the village square
Bereft of clothes , stoned and maimed 
Flesh utters not a word when armies mutilate 
Flesh is neither yours nor mine 
It's black, yellow, brown and white 
Flesh burns on pyres with widows and orphans 
Flesh asks not recompense for its charred visage 
It merely turns to ash and flips into the rivers 
Or lies stone cold as a cadaver to be skinned on a hospital table 
Or sleeps with death in a muddy grave under the white lilies that you lay on it through your veil of tears .
Copyright Lily Swarn 
30.8.2018
 —

Thursday, June 14, 2018

பெருநாளின் பிறை நிலவு !

This is an almost translation of a poem in English by my friend LILY SWARN !

  • பெருநாளின் பிறை நிலவு !



பெருநாளின் பிறை நிலவு
புன்னகைக்கும் அரைநிலவு
கண்சிமிட்டிச் சிரிக்கின்ற
தாரகையின் துணை நிலவு!

இன்றைய நிலவழகைக்
காணா திருப்பாரோ
கண்பெற்ற பயனதனைப்
பேணா திருப்பாரோ?

வெள்ளிக் கதிரணிந்த
பிள்ளைப் பெருநிலவு
வேனல் களைப்பனைத்தும்
தீர்க்கின்ற திருநிலவு!

இன்றைய இரவதனின்
இனிய  நிலவரசி !
இனிமையைத் தேனாகப்
பொழிகின்ற பேரரசி !

மனமென்னும் மண்விளக்கின்
திரிகளிலே ஒளியேற்றும்
பிறைநிலவின் கதிர்வீச்சு
புன்மைகளைப் புறந்தள்ளும் !

பேரொளியாம் புன்னகையாம்
கீற்றொளியின் குளிர்ந்தகதிர்
படர்ந்தொளிரும் பாரெங்கும்
பால்பொழியும் பாங்கெனவே !

நிறைந்த நிலவொளியின்
நிம்மதிக் கீற்றணைந்து
நிலைக்கும் மனங்களிலே
பிரார்த்தனையின் பலனெனவே !

திறந்து வைத்த கதவுகளின்
சன்னல் கம்பிகளின்
ஊடே நுழைந்திடுமே
உள்ளெங்கும் நிறைந்திடுமே !

உறவாடும் கணங்களிலே
உள்ளம் குளிர்ந்திடுமே
உண்மை அன்பெனவே
ஊற்றாய் பெருகிடுமே !

--கே.பாலாஜி
ஜூன் 15  2018

  • The above lines are set to music by my wife LAKSHMI BALAJI . This is just an unplugged version. The link for audio file is attached herewith. 

https://soundcloud.com/saransang/lb-perunaalin-pirai-nilavu

  • Original lines in English :
Eid Ka Chaand
( Eid Moon )


How can the moon not be seen in all its splendour tonight ?
The night when the ittar in the balmy breeze inebriates the senses ?
The slip of a moon vying for attention with the silver of her paazebs
The Chhan chhan rhythm of her anklets
Pounding on his frail fist of a heart
The sheen of moonlight seeping through her aura
Igniting a million diyas on the mud plastered banisters of his vows
Who can stop her from sashaying through closed doors and bolted windows
She is the reigning queen tonight
She is his Eid Ka Chaand

Copyright :  Lily Swarn 14.6.2018

Saturday, June 9, 2018

பூக்கள் போற்றுதும்..

Tamil Translation done by me of a Poem  titled  'Ah to be a flower'  penned by my friend LILY SWARN:

பூக்கள் போற்றுதும் ...


பூக்கள் போற்றுதும் ...
----------------------------

மனிதன் மலராய் பிறந்திருந்தால்...
மனிதம் என்னும் மணத்தைப் பரப்ப
மலராய் மனிதன் பிறந்திருந்தால்...

'இன்று புதிதாய் மலர்ந்தோம்' என்னும்
மகிழ்வை மட்டும் தாம் பரப்பும்
மலர்கள் தமக்குத் துயரில்லை  !
கடந்த பிறவி கர்மவினைகள்
என்பவை யெதுவும் பொருட்டில்லை !

தானெனும் அகந்தை அவற்றுக் கில்லை
தன்மய மாக்கும் சிரிப்பே எல்லை !
தண்மை நிறைந்த மலர்ச்சி போதும்
மனதை மயக்கும் அழகைக் கூட்ட, 
மதுரம் நிறைந்த தேனைக் கூட்டி
மரகதத் தும்பிகள் தமக் கூட்ட !

அமுதம் நிகர்த்த அன்பை ஈயும்
அவற்றின் அழகுக் கிணையேது !
போதும் என்றொரு எண்ண மதனை
ஈயும் யோக நிலையீதே  !

போரும் இல்லை புன்மைக ளில்லை
அரக்கம் என்பதை எதிர்கொளும் நிலையிலை !
மொட்டா யிருப்பது மலர்ந்தால் போதும் 
மலர்ந்தே மணத்தை யளித்தால் போதும்  !

முட்செடி யதனின் மலரா னாலும்,
கள்ளியில் மலர்ந்த மலரானாலும்,
பூஜைக் குகந்த பூவிலை யெனினும்,
புல்லின் நுனியில் மலர்ந்த தெனினும்,

பாலையி னிடையில் பூத்த தெனினும்,
பனி படர்ந்த பாதையி லெனினும்,
'மறந்திட வேண்டாம்' என்றே சொல்லி
மலைச்சரி வினிலே மலர்ந்த தெனினும்,

பூவெனும் அழகு புன்னகை பூக்கும்
புலர்ந்த பொழுதாய் மனதில் நிலைக்கும்  !
காலைப்பறவை, கண்ட மகிழ்வில்
வானை நிறைத்துச் சிறகை விரிக்கும் !

பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் !
காயப் படுத்தல் என்பதே அறியாப்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  !

மகிழ்ச்சி ஒன்றையே மணத்தால் நிறைத்திடும்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  ! 

தாய்நா டதனைக் காத்திடும் வீரர்
தாயகம் திரும்பும் வழிகளில் நிறைந்து 
வரவேற் றவர்தம் மகிழ்வில் சிரித்திடும்
வண்ண வண்ணப் பூக்கள் போற்றுதும்  !

கசக்கிப் பிழியும் கைகளில் கூட
மணமே நிறைத்திடும் குணப்பெருங் கடலாம்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் 
புண்ணிய ராகிய பூக்கள் போற்றுதும்  !

---K.Balaji
June 09 2018


Original in English : 

Ah !to be a flower
If only humans were flowers
Born to spread radiance and fragrance
Bewitching with their dazzle
Knowing their fate
No Karma mysteries
No one upmanship
Just a serene blossoming
A blissful enchantment
Myriad bumble bees
Buzzing and circling
Benevolently donating honey
To the eager recipients
Nectar sodden
Hues of love
Blooming in euphoric yogic contentment
No wars to fight
No demons to slay
Just uncurl from a bud
And glow in any place
A desert flower on a thorny cactus
A rhododendron in the snow line
A forget me not sprouting in the ocean caressed cliffs
Letting the humming bird flirt with its petals in broad sunlight !
Ah to be a flower
That hurts not a soul
Ah to be a flower
That lives to give joy
Ah to be a flower
Whose petals line the streets
For warriors coming home
From the strife and struggles
Letting itself be mutilated
Perfuming the hand that crushes it
Ah to be a flower 

--Copyright: Lily Swarn 9.2.2018

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...