உலர்ந்த சருகாகி யோர்
மூலையில் விழுந்துவிட்டேன்!
பயனற்ற பொருளாகி யோர்
பாரமாய் நின்றுவிட்டேன் !
பட்டயம் கட்டப்பட்ட
பல்லக்குக் குதிரை யொன்று
பார்க்கவோ ராளின்றிப்
பாதையின் ஓரத்தில்
பரிதவித்து நிற்கிறது !
காலத்தின் மாற்றத்தால்
கண்ணியங்கள் மறக்கப்படும்!
கற்பூரம்போலக்
காற்றில் கரைக்கப்படும்!
என்றாலும் மனத்தின்
ஏதோவோர் மூலையிலே
நம்பிக்கையின் கீற்றொன்று
மெல்லப் புறப்பட்டு
மேனியைச் சிலிர்க்க வைக்கும்!
மேன்மைகள் நிலைக்கவைக்கும்!
கடந்த காலத்தின் சிறப்பெல்லாம்
கல்லோவிய மாகிக்
களிக்கவைக்கும்!
கண்களைக் குளிரவைக்கும்!
--Translation and picture : K.Balaji
Above is a translation done by me,
of the following poem by my friend
A leaf of life
I shrivelled up and aged
Useless and burdensome
A horse put to paddock
Blown away to a corner
Soon to be forgotten
A lost hope
Copyright Lily Swarn 13.10.2016

No comments:
Post a Comment