Monday, April 22, 2019

சங்கு புஷ்பம் மலரும் போது ...ராகம்: தேஷ்

சங்கு புஷ்பம் மலரும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
அந்திமாலைகள் ஆடை மாற்றும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.          (சங்கு)

வானத்தைக் குளிர்ச்சியால்
நனைத்திடப் பௌர்ணமி
மண்குடமேந்தி நடக்கையிலே
நீளக்கருவிழி மேகங்கள் உரசிட
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.           (சங்கு)

தாமரையிலைதனில்
பைங்கொடிப் பெண்ணாள்
காதல்  கடிதம் எழுதுகையில்
கருநீலக் காடுகள்
மலர்மெத்தை விரிக்கையில்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.            (சங்கு)

--கி. பாலாஜி
06.04.2018

பாடல் மூலம்- மலையாளத் திரைப்படம் சகுந்தலா
"சங்கு புஷ்பம் கண்ணெழுதும் போள்"
எழுதியவர்: வயலார் ராமவர்ம

மூலமொழிப் பாடலின் மெட்டு மாற்றாமலேயே

மொழிபெயர்க்கப்பட்டது.

1 comment:

  1. Lucky Club: The Best Casino Site
    Lucky Club is a 카지노사이트luckclub new online casino site that offers an entertaining and secure experience for your online players. We have had the success of growing  Rating: 4.5 · ‎11 votes

    ReplyDelete

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...