Thursday, June 14, 2018

பெருநாளின் பிறை நிலவு !

This is an almost translation of a poem in English by my friend LILY SWARN !

  • பெருநாளின் பிறை நிலவு !



பெருநாளின் பிறை நிலவு
புன்னகைக்கும் அரைநிலவு
கண்சிமிட்டிச் சிரிக்கின்ற
தாரகையின் துணை நிலவு!

இன்றைய நிலவழகைக்
காணா திருப்பாரோ
கண்பெற்ற பயனதனைப்
பேணா திருப்பாரோ?

வெள்ளிக் கதிரணிந்த
பிள்ளைப் பெருநிலவு
வேனல் களைப்பனைத்தும்
தீர்க்கின்ற திருநிலவு!

இன்றைய இரவதனின்
இனிய  நிலவரசி !
இனிமையைத் தேனாகப்
பொழிகின்ற பேரரசி !

மனமென்னும் மண்விளக்கின்
திரிகளிலே ஒளியேற்றும்
பிறைநிலவின் கதிர்வீச்சு
புன்மைகளைப் புறந்தள்ளும் !

பேரொளியாம் புன்னகையாம்
கீற்றொளியின் குளிர்ந்தகதிர்
படர்ந்தொளிரும் பாரெங்கும்
பால்பொழியும் பாங்கெனவே !

நிறைந்த நிலவொளியின்
நிம்மதிக் கீற்றணைந்து
நிலைக்கும் மனங்களிலே
பிரார்த்தனையின் பலனெனவே !

திறந்து வைத்த கதவுகளின்
சன்னல் கம்பிகளின்
ஊடே நுழைந்திடுமே
உள்ளெங்கும் நிறைந்திடுமே !

உறவாடும் கணங்களிலே
உள்ளம் குளிர்ந்திடுமே
உண்மை அன்பெனவே
ஊற்றாய் பெருகிடுமே !

--கே.பாலாஜி
ஜூன் 15  2018

  • The above lines are set to music by my wife LAKSHMI BALAJI . This is just an unplugged version. The link for audio file is attached herewith. 

https://soundcloud.com/saransang/lb-perunaalin-pirai-nilavu

  • Original lines in English :
Eid Ka Chaand
( Eid Moon )


How can the moon not be seen in all its splendour tonight ?
The night when the ittar in the balmy breeze inebriates the senses ?
The slip of a moon vying for attention with the silver of her paazebs
The Chhan chhan rhythm of her anklets
Pounding on his frail fist of a heart
The sheen of moonlight seeping through her aura
Igniting a million diyas on the mud plastered banisters of his vows
Who can stop her from sashaying through closed doors and bolted windows
She is the reigning queen tonight
She is his Eid Ka Chaand

Copyright :  Lily Swarn 14.6.2018

Saturday, June 9, 2018

பூக்கள் போற்றுதும்..

Tamil Translation done by me of a Poem  titled  'Ah to be a flower'  penned by my friend LILY SWARN:

பூக்கள் போற்றுதும் ...


பூக்கள் போற்றுதும் ...
----------------------------

மனிதன் மலராய் பிறந்திருந்தால்...
மனிதம் என்னும் மணத்தைப் பரப்ப
மலராய் மனிதன் பிறந்திருந்தால்...

'இன்று புதிதாய் மலர்ந்தோம்' என்னும்
மகிழ்வை மட்டும் தாம் பரப்பும்
மலர்கள் தமக்குத் துயரில்லை  !
கடந்த பிறவி கர்மவினைகள்
என்பவை யெதுவும் பொருட்டில்லை !

தானெனும் அகந்தை அவற்றுக் கில்லை
தன்மய மாக்கும் சிரிப்பே எல்லை !
தண்மை நிறைந்த மலர்ச்சி போதும்
மனதை மயக்கும் அழகைக் கூட்ட, 
மதுரம் நிறைந்த தேனைக் கூட்டி
மரகதத் தும்பிகள் தமக் கூட்ட !

அமுதம் நிகர்த்த அன்பை ஈயும்
அவற்றின் அழகுக் கிணையேது !
போதும் என்றொரு எண்ண மதனை
ஈயும் யோக நிலையீதே  !

போரும் இல்லை புன்மைக ளில்லை
அரக்கம் என்பதை எதிர்கொளும் நிலையிலை !
மொட்டா யிருப்பது மலர்ந்தால் போதும் 
மலர்ந்தே மணத்தை யளித்தால் போதும்  !

முட்செடி யதனின் மலரா னாலும்,
கள்ளியில் மலர்ந்த மலரானாலும்,
பூஜைக் குகந்த பூவிலை யெனினும்,
புல்லின் நுனியில் மலர்ந்த தெனினும்,

பாலையி னிடையில் பூத்த தெனினும்,
பனி படர்ந்த பாதையி லெனினும்,
'மறந்திட வேண்டாம்' என்றே சொல்லி
மலைச்சரி வினிலே மலர்ந்த தெனினும்,

பூவெனும் அழகு புன்னகை பூக்கும்
புலர்ந்த பொழுதாய் மனதில் நிலைக்கும்  !
காலைப்பறவை, கண்ட மகிழ்வில்
வானை நிறைத்துச் சிறகை விரிக்கும் !

பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் !
காயப் படுத்தல் என்பதே அறியாப்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  !

மகிழ்ச்சி ஒன்றையே மணத்தால் நிறைத்திடும்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  ! 

தாய்நா டதனைக் காத்திடும் வீரர்
தாயகம் திரும்பும் வழிகளில் நிறைந்து 
வரவேற் றவர்தம் மகிழ்வில் சிரித்திடும்
வண்ண வண்ணப் பூக்கள் போற்றுதும்  !

கசக்கிப் பிழியும் கைகளில் கூட
மணமே நிறைத்திடும் குணப்பெருங் கடலாம்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் 
புண்ணிய ராகிய பூக்கள் போற்றுதும்  !

---K.Balaji
June 09 2018


Original in English : 

Ah !to be a flower
If only humans were flowers
Born to spread radiance and fragrance
Bewitching with their dazzle
Knowing their fate
No Karma mysteries
No one upmanship
Just a serene blossoming
A blissful enchantment
Myriad bumble bees
Buzzing and circling
Benevolently donating honey
To the eager recipients
Nectar sodden
Hues of love
Blooming in euphoric yogic contentment
No wars to fight
No demons to slay
Just uncurl from a bud
And glow in any place
A desert flower on a thorny cactus
A rhododendron in the snow line
A forget me not sprouting in the ocean caressed cliffs
Letting the humming bird flirt with its petals in broad sunlight !
Ah to be a flower
That hurts not a soul
Ah to be a flower
That lives to give joy
Ah to be a flower
Whose petals line the streets
For warriors coming home
From the strife and struggles
Letting itself be mutilated
Perfuming the hand that crushes it
Ah to be a flower 

--Copyright: Lily Swarn 9.2.2018

Monday, May 28, 2018

கூவ மறக்குமோ குயில்?


குயில் எங்கோ
நிறுத்தாமல்
கூவி அழைக்கிறது..
கூக்குரலில் உணர்வுகளைக்
குழைத்து அழைக்கிறது!
என்ன அதன் எண்ணம்?
ஏனிந்த ஏக்கம்?
என்னென்று புரியாத
உணர்ச்சிக் கலவைகளின்
உன்னதக் குரலோசை !

இணையைத் தேடி
அழைக்கிறதா?
இன்பம் தன்னைப்
பகர்கிறதா?
மனது க்கோர்
துணைக்காக
மனம் கசிந்து
கரைகிறதா?

ஆடொன்று
தன்குட்டி
தனைத் தேடிக்
குரலெழுப்பும்
ஏக்கத்தின் பிரதிபலிப்பு
இதன் குரலில்
காண்கிறதே !

இணைகாணா
துக்கம்தான்
தொடர் குரலாய்க்
கூவித்
துளைக்கிறதோ
மௌனத்தை ?

மணம் வீசும் மாம் பூக்கள்
மாம்பிஞ்சாய் தாம் மாறிக்
கொஞ்சும் மதலையெனக்
குலைகுலையாய் தொங்குமொரு
மாஞ்சோலை தனிலேயோர்
மூலையிலே வந்தமர்ந்து
முறைவைத்துக் குரலெழுப்பும்
குயிலின் மனக்குறைதான்
என்னென்று புரியாதோ?
வெந்தமனம் தணியாதோ?

காற்றினால் அலைக்கழிந்த
மாம்பூக்கள் தாமுதிர்ந்து
சருகாகி மிதிபட்டுச்
சாகும் கொடுமைதனைக்
குயிலொன்றே அறியும்!
அதன்
குரலொன்றே மொழியும் !

கொடுங்காற்று பேயாகச்
சுழன்றடித்து வீசும்வரை,
சூல்கொண்ட மேகங்கள்
சுமைதாங்க முடியாமல்
சுமந்த நீரதனைப்
பெருமழையாய்
பேரிரைச்சல் தன்னோடு
பொழிந்து தள்ளுகின்ற
காலம்வரை
குயிலதனின் கூவல்
நிற்காது !

இன்னும் கூவிக்
குறை சொல்லக்
குறையொன்றும் இல்லாத
நிலையெய்தும் காலம்வரை,
அதன் கூவல்
கேட்கும்,
நிற்காது !
அது
கூவ மறக்காது !



தமிழாக்கம்
கிருஷ்ணமூர்த்தி பாலாஜி
16 05  2018

Original  lines in  English by LILY SWARN :

The Koel cannot stop

It simply has to call out

Insistently

It’s tough to decode the emotion

Is it a joyful note

Full of euphoria ?

Or a searching cry

Like a sheep bleating for its lamb ?

Perhaps it’s an inquisitive shout out to its mate

The tenor and tone remains constant

While the fragrant bunches of mango blossoms

Become tiny green baby mangoes clustered on a branch

The Koel knows that the winds have blown away a few flowers

Those that were not destined to be fruit

They got trampled under shoes

The Koel sits hidden amidst the deep green pointed leaves

She will keep up her yearning calls

Till the monsoon rains thrash the parched land

The damp winds heavy with desire

The coal black clouds gathered in an assembly

Till her throat tells her to stop

There is nothing more to sing for .

Copyright Lily Swarn 15.4.2018

அன்பே அன்னை அனைத்தும் அன்னை


அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!



I was impressed with the wonderful verses in English, about Mother, by my friend Lily Swarn. I felt like translating immediately in Tamil. Both versions are given below:



அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!
அன்னையின் அன்பே காத்திடும் என்னை !

மென்மழைச் சாரலின் தண்மை என்அன்னை !
மேவிய தழுவலில் மேகம் என் அன்னை !
வளைக்கை ஓசையின் தாலாட் டன்னை !
வீரம் ஊட்டும் தமிழ்ப் பாட் டன்னை !

மணமிகு துணிகளில் அணைத்தே எடுக்கும்
அன்னையின் தழுவலில் பாது காப்பு !
உழைக்கும் கரங்கள் ஊட்டும் உணவில்
மிளிரும் தெய்வீகப் பிரதிபலிப்பு !

காப்பதற்கெனவே நின்றிடும் துர்க்கை !
கல்வி யளித்திடும் கருணையி லேயவள்
கையில் வீணையும் ஏடும் கொண்டு
காட்சி யளித்திடும் வாணி !
தின்மை நீக்கிடும் சாமுண்டி,
தேர்ந்த தாயவள் மாகாளி !

பெற்ற தாயவள் பேணும் தெய்வம்!
பேறும் வீரமும் நல்கிடும் தெய்வம் !
போற்றிடும் சக்தியே தாயின் உருவம்!
புனைவது அனைத்தும் அவள் செயலாலே !

அவளில் பிறந்து அவள்நிழ லானேன் !
அன்பில் கலந்து அவளுரு வானேன் !

அவள்குரல் என்னில் என்பார் சிலரும் !
அவள்சிரிப் பெனக்கும் உண்டெனச் சிலரும் !
அவளது கடுமை என்னில் திகழும் !
அவளென் மூச்சுக் காற்றினில் என்றும் !

வாழ்வென தன்னை அன்பால் நெய்து 
பண்பால் போர்த்தி வழங்கிய பட்டு !
தாழ்வெனக் கில்லை ! தாய் அவள் எல்லை !
தூயவள் அன்பால் என்றும் குறையிலை !

    அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!
    அன்னையின் அன்பே காத்திடும் என்னை !

---K. BALAJI
17.05.201


Click the following link to hear Mrs.LAKSHMI BALAJI, my wife, who sings the above , setting the tune for lyrics herself.


ORIGINAL LINES:

For Mother:

She drizzles like a gentle rain
From realms of soft cuddles
Bangled arms rock me to sleep
Cooing songs of valiant beings

Protective folds of fragrant fabric
Clothing me in satin splendour
Hands toil to feed me goodies
Suffusing me with divine ardour

Durga to protect me
Saraswati to instruct
Veena Pustak Dharini
Or Chandi to destruct
She is my Kali
Goddess I adore
She my power divine
My Shakti incarnate

Born of her I am her shadow
They say I sound like her
Some say I smile her smile
And even scold like her
She lives in me each breath
This life is also a gift
So lovingly wrapped by her !

Copyright : Lily Swarn 7.6.2016

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...