Friday, October 19, 2018

உலர்ந்த சருகின் உற்சாகம் !


உலர்ந்த சருகாகி யோர் 
மூலையில் விழுந்துவிட்டேன்!


பயனற்ற பொருளாகி யோர் 

பாரமாய் நின்றுவிட்டேன் !

பட்டயம் கட்டப்பட்ட 
பல்லக்குக் குதிரை யொன்று 
பார்க்கவோ ராளின்றிப் 
பாதையின் ஓரத்தில் 
பரிதவித்து நிற்கிறது !




காலத்தின் மாற்றத்தால் 

கண்ணியங்கள் மறக்கப்படும்! 
கற்பூரம்போலக் 
காற்றில் கரைக்கப்படும்!

என்றாலும் மனத்தின் 
ஏதோவோர் மூலையிலே 
நம்பிக்கையின் கீற்றொன்று 
மெல்லப் புறப்பட்டு 
மேனியைச் சிலிர்க்க வைக்கும்!
மேன்மைகள் நிலைக்கவைக்கும்!
கடந்த காலத்தின் சிறப்பெல்லாம்
கல்லோவிய மாகிக் 
களிக்கவைக்கும்!
கண்களைக் குளிரவைக்கும்!


--Translation and picture : K.Balaji

Above is a translation done by me, 
of the following poem by my friend

A leaf of life

I shrivelled up and aged 
Useless and burdensome 
A horse put to paddock 
Blown away to a corner 
Soon to be forgotten 
A lost hope 


Copyright Lily Swarn 13.10.2016

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...