Monday, April 6, 2020

மழையின் மறுபக்கம்




மழையின் மறுபக்கம்
--------------------------------------

'கானப் பறவைகளின்
கலகலெனும் ஓசையிலே'
கண்விழித் தெழுந்தாளே 
கன்னிப் பெண்ணும் தான்!
நேற்றிரவு பெய்த மழைச் 
சிலிர்ப்புகள் அடங்கிடவும், 
சிந்தை குளிர்ந்ததுவே
சிலையாய் உறைந்ததுவே !
நினைவுகளின் மிதப்பினிலே 
கன்னம் சிவந்ததுவே !

பருவ மழையதனின் 
சின்னச் சிலிர்ப்பினிலே 
கண்கள் குழைந்தனவே 
கனவுகள் நிறைந்தனவே!

மகிழ்ச்சிப் பெருக்கதனால் 
நிறைந்த மனத்துடனே 
இயற்கை அழகதனின் 
அத்தனை நிறைகளையும் 
தனதாய் பாவித்தாள் 
தனதென்றே தான் நினைத்தாள்.

அதிகாலை அழகதனின் 
அத்தனை கலைகளையும் 
ஒருமுறை யேனும் தன் 
உடைமை ஆக்கிடவே 
உள்ளம் விழைந்திட்டாள் 
உணரத் தலைப்பட்டாள்! 
நுனிப்புல் தனிலொளிரும் 
பனித்துளி அழகதுவும்,
அழகின் சிரிப்பாகும்
அதிகாலைக் குளிரதுவும்,
அனைத்தும் தனதாக்கி 
மனத்தை நிறைத்திட்டாள்.

மங்கை தலையொசிந்து,
பலகணி தனைத்தாண்டித் 
தன்முகம் நோக்கித்தான் 
சிரிக்கின்ற மலரதனில் 
சிந்தை பறிகொடுத்தாள்!
அழகாய் தன் கவனம் 
ஈர்க்கின்ற இலைகளதன் 
ஒவ்வோ ரசைவினிலும் 
உயிர்த் தாகம் தணிவித்தாள்!

நேற்றிரவு பெய்த மழை 
நினைவுகளில் சித்திரமாய் 
நின்றதனின் விளைவுகளாம் 
இத்தனை கனவுகளும் !
மழையின் மறுபக்கம் 
தனை மனமும் உணரும் வரை 
இத்தனையும் கனவுகளாய் 
இதயம் நனைத்திடுமே !

ஊமையின் கனவுகளால்
உலகுக்குப் பயனுண்டோ ?
உண்மை உணர்வுகளை
உணரும் மனமுண்டோ ?

கி.பாலாஜி
19.03.2020
An influence of S.R.Ravi's 
'Other side of Rain

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...